மணிப்பூரில் ஆட்சியமைக்க தயாராகிறது பாஜக
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் அமல் படுத்தக் கூடாது என்றும், வரும் 28 ம் தேதிக்குப் பிறகு பாஜகதலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் சமதா கட்சித் தலைமையில் ஆட்சி நடத்தி வந்த முதல்வர்கொய்ஜமின் ஆட்சியை பாஜக கவிழ்த்தது.
நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரிய முதல்வர் கொய்ஜமுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.இதையடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது.
இந்த நிலையி பாஜகவைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏக்கள் உள்பட 32 பேர், வெள்ளிக்கிழமை டெல்லி விரைந்தனர்.
அவர்கள் பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியையும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனையும் சந்தித்துப்பேசினர்.
அவர்கள், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சமதா கட்சியும், பாஜகவும் சேர்ந்து வரும் 28 ம்தேதி ஆலோசனை நடத்த இருக்கிறோம்.
28 ம் தேதிக்குப் பிறகு மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்கும் என்றும், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தக் கூடாது என்றும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக மணிப்பூரில் பாஜக செயல்பட்டுள்ளது என்று ஜனா.கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications