1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் இனி மேல் நிலைப்பள்ளிகளாக்கப்படும் என்றுகல்வி அமைச்சர் தம்பிதுரை சனிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வி அமைச்சர் தம்பிதுரைநிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சில பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ளது. சில பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதலே கல்விகற்பிக்கப்படுகிறது.
இதே போல் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மட்டுமேகற்பிக்கப்படுகிறது.
இதை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளிகளாக்கப்படும்.
இதுகுறித்து ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன் என்றார் தம்பிதுரை.












Click it and Unblock the Notifications