சட்டசபை த.மா.கா. தலைவராக எஸ்.ஆர்.பி. தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் செயல்படுவார் என்றுஅக்கட்சித் தலைவர் ஜி.கே. மூப்பனார் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தமாகா செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
சட்டசபை தமாகா தலைவராக எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், துணைத் தலைவராக வி.கே. லட்சுமணன்,கொறடாவாக சி. ஞானசேகரன், செயலாளராக ஆர். ஈஸ்வரன், பொருளாளராக கே.ஆர். ராமசாமி ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார்தான் இவர்களை நியமித்துள்ளார் என்று ஞானதேசிகன் அந்த அறிக்கையில்கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications