குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 5 அம்ச திட்டம்
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க 5 அம்ச திட்டத்தை அமுல்படுத்த தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ள விவரம்:
1. தமிழ்நாட்டில் 100 பேருக்கு மேற்பட்ட மக்கள் தொகையுள்ள குடியிருப்புப் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிசெய்து கொடுத்தல்.
2. சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்டுவதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3. புதிய வீராணம் திட்டத்திற்கான திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இத்திட்டம் தேசிய மற்றும் பன்னாட்டு நிதிநிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும்.
4. ஏரிகள், பாசன வாய்க்கால்கள் ஆகியவை நவீனப்படுத்தப்படும்.
5. மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவிலுள்ள பெரும் ஆறுகளை இணைக்கும் தீபகற்ப ஆற்று நீர் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்.