For Daily Alerts
Just In
2 வெவ்வேறு விபத்துக்களில் 2 பேர் சாவு
கோவை:
கோவை அருகே மோட்டார் சைக்கிள் மேல் ஜீப் மோதியதில் ஒரு வாலிபர் இறந்தார்.
கோவை ரத்தினபுரியைைச் சேர்ந்தவர் ராவுத்தர் (28). இவரது நண்பர் தண்டபாணி (25). இவர்கள் இருவரும்மோட்டார் சைக்களில் மேட்டுப்பாளையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
பெரியநாயக்கன் பாளையம் அருகே இவர்கள் சென்றபோது ஒரு ஜீப் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில்ராவுத்தர் அதே இடத்தில் இறந்தார். தண்டபாணி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல், பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் மகேஷ் (23), அப்பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைபலனின்றி இறந்தார்.
இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Story first published: Sunday, May 27, 2001, 5:30 [IST]