ஆளுநர் உரைக்கு பாராட்டுக்கள்
சென்னை:
கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் ஆளுநர் பாத்திமா பீவி ஆற்றிய உரைக்கு தமிழகத்தின் பல்வேறுசங்கங்களும் பாராட்டு தெரிவித்துள்ளன.
மாணவ மாணவிகளுக்குப் பல்வேறு விதமான முற்போக்குத் திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதைவரவேற்று, பாராட்டுகிறோம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கூறியுள்ளது.
தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுதேடிக்கொண்டிருக்கும் பாமர மக்களுக்குத் தேர்தல் பரிசாக "குடும்பத்துக்கு ஒரு வீடு திட்டம்" கிடைத்துள்ளது என்றுபாராட்டியுள்ளது.
தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த பயிர் கடன், வட்டி, அபராத வட்டி, தள்ளுபடி ஆகியவை குறித்துஆளுநர் உரையில் குறிப்பிடப்படாதது பாராட்டுக்குரியது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கைவெளியிட்டுள்ளது.
ஏழைப் பெண்களின் கல்வியை ஊக்கப்டுத்தும் முயற்சியாக, தலித் மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள "இலவசசைக்கிள் திட்டம்" அமைந்துள்ளது என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆளுநர் உரையைப்பாராட்டியுள்ளது.