மேட்டுப்பாளையம்: வேன்-லாரி மோதலில் 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
மேட்டுப்பாளையம் (கோவை):
மேட்டுப்பாளையம் அருகே மருதி வேனும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், லாரியில் பயணம் செய்த3 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் என்ற இடத்தில் ஒரு மாருதி வேன் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியும் மாருதி வேனும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. இதில், லாரிஅருகில் இருந்த மரத்தில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில், லாரியில் பயணம் செய்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முருகையா பானு (60), வினேசா பானு(14), பாப்பநாயக்கன் பாளைத்தைச் சேர்ந்த வினோத் (14) ஆகியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மாருதி வேனில் பயணம் செய்த 10 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications