For Quick Alerts
For Daily Alerts
Just In
கஞ்சா விற்ற தாய், மகன் கைது
கோவை:
கோவை அருகே கஞ்சா விற்றதாகத் தாயும் மகனும் கைது செய்யப்பட்டனர்.
பெற்ற தாயே கஞ்சா விற்ற மகனுக்கு துணை போனார் . கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்ராஜேந்திரன். இவரது மனைவி சரஸ்வதி (41). இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகன் உண்டு.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பஸ் ஸ்டாப்பில் இவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.போலீசாரைக் கண்டவுடன், அவர்கள் பயந்து பதுங்க ஆரம்பித்தனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்கள்இருவரையும் அழைத்து சோதனையிட்டனர்.
அப்போது, அவர்களிடமிருந்து 80 கஞ்சாப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கஞ்சாப் பொட்டலங்களைவீரபாண்டி பிரிவில் விற்பனைக்கு கொண்டு செல்ல இருவரும் முயன்றனர் என்பது போலீஸ் விசாரணையில்தெரியவந்தது.
சரஸ்வதி மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, May 29, 2001, 5:30 [IST]