ஊனத்தை வென்ற மாணவனும் ஆசிரியரும்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு சிவகிரி ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் தர்மலிங்கம் நடந்துமுடிந்த ப்ளஸ் 2 தேர்வில் வரலாறு பாடத்தில் 200க்கு 192 மதிப்பெண்கள் பெற்றுமாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் கால்கள் ஊனமானவர். இவரது தந்தை டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது வரலாற்று ஆசிரியர் ஜெகதீசன் கண்பார்வையற்றவர் என்பதும்குறிப்பிடத்தக்கது.

தர்மலிங்கம் மொத்தம் 1,200க்கு 1,030 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தர்மலிங்கம் கூறுகையில், நான் கலெக்டராக விரும்புகிறேன். என் ஏழ்மையைஉணர்ந்து அரசு உதவினால் நான் கலெக்கடருக்கு படிப்பேன். தற்போது நான்ஆசிரியர் பயிற்சிக்கு படித்து ஆசியராக முடிவெடுத்துள்னேன்.

நான் ஆசிரியரானால் ஏழை மாணவ மாணவியர் படித்து முன்னேற உதவுவேன். என்வெற்றிக்கு என் பெற்றோரின் ஊக்கமும்,ஆசிரியர்களின் ஆதரவும்தான் முக்கியகாரணம்.என்றார்.

வரலாற்று ஆசிரியர் ஜெகதீசன் கூறுகையில், வெற்றிக்கும், சாதனைக்கும் ஊனம்தடையில்லை என நாங்கள் நிரூபித்துள்ளோம். நான் அன்றன்று நடத்த வேண்டியபாடத்தை என் குடும்பத்தாரை படிக்க சொல்லி கேட்டு,பள்ளி சென்று பாடம்நடத்துவேன். என் திறமையை தர்மலிங்கம் வெளிக் கொணர்ந்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+