Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமியாருக்கு வைத்த குறி குழந்தையை பதம் பார்த்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆட்டோ வாங்கித் தராததால் கோபமடைந்த மருமகன் தனது மாமியாரை துப்பாக்கியால் சுட முயன்றார். ஆனால்அது தவறுதலாக பக்கத்து வீட்டுக் குழந்தை மீட்டு பட்டு குழந்தை காயமடைந்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் வீரா. அடிக்கடி குடித்து விட்டு கலாட்டா செய்வது,அடிதடியில் ஈடுபடுவது வீராவின் பொழுதுபோக்குகளில் ஒன்று.

வீராவுக்குத் திருமணம் ஆகி விட்டது. அவரது மனைவி பெயர் சித்ரா. அடிக்கடி குடித்து விட்டு கலாட்டாசெய்வதால் கணவரிடம் சண்டை போடுவார் சித்ரா. பதிலுக்கு மனைவியை அடித்து துவம்சம் செய்வார் வீரா.

இந்த நிலையில், தான் ஆட்டோ வாங்க வேண்டும், எனவே பெற்றோர் வீட்டுக்குப் போய் பணம் வாங்கி வா என்றுமனைவி சித்ராவை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார் வீரா. பின்னர் வீராவும் தனது மாமியார்வீட்டுக்குப் போனார்.

அங்கு வீராவுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வீரா,கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாமியாரை நோக்கி சுட்டார். ஆனால் அவரது மாமியார் அங்கிருந்துதப்பி ஓடினார். வீராவும் விடவில்லை. துரத்தினார். இந்த மோதலில் பக்கத்து வீட்டில் இருந்த தமிழ்ச்செல்வி என்றஇரண்டு வயது குழந்தையின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

இதைப் பார்த்துப் பயந்து போன வீரா அங்கிருந்து தப்பி விட்டார். குழந்தை எழும்பூர் குழந்தைகள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+