For Daily Alerts
Just In
கோவை டாக்டர் வீட்டில் கொள்ளை
கோவை:
கோவை டாக்டர் வீட்டில் இரண்டரை லட்ச ரூபாய் நகை, பணம் கொள்ளை போனது.
கோவை அருகே உள்ள மேட்டூரைச் சேர்ந்தவர் செழியன். இவரது மனைவி ராதிகா. இவர்கள் டாக்டர்கள்என்பதால், அருகிலேயே கிளீனிக் வைத்து நடத்தி வந்தனர்.
கடந்த புதன் கிழமை இருவரும் அருகில் அவர்கள் கட்டி வரும் வீட்டை பார்வையிடச் சென்று விட்டனர்.
இந்த சமயத்தில் சிலர் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரொக்கப்பணம்ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, May 31, 2001, 5:30 [IST]