வங்கியில் ரூ 1.5 கோடி மோசடி: 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

நூற்பாலை அமைப்பதாகக் கூறி வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரைப் தமிழ்நாடுபுலனாய்வுத் துறை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் டி. வி. ராஜூ என்ற வரதராஜூ (47). இவர் ஒரு "ஸ்பின்னிங்மில் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டார். இந்த மில் ஆரம்பிக்க பெருமளவில் பணம் தேவைப்பட்டது.

இவரும், இவரது மனைவி உஷா (35) வும் இணைந்து வங்கியில் கடன் கேட்டனர். மேலும் இவர்கள் தங்களதுகூட்டாளியாக சீனிவாசன் என்பவரையும் சேர்த்துக் கொண்டனர்.

வரதராஜூ கடன் தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தை அணுகினார். அவர்களிடம், தான் ஒருஆடிட்டர் எனக் கூறி நெருங்கிப் பழகினார். நம்பிக்கைக்கு உரியவராக மாறிய பிறகு, நிலப்பத்திரம், வருமானவரிச்சான்றிதழ், இயந்திரக் கொள்முதல் ரசீது ஆகியவற்றை கொடுத்து ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றார்.

பின்னர் நடைமுறை மூலதனமாக 50 லட்சம் பெற்றார். இந்த கடன் தொகையை 96ம் ஆண்டு முதல் 99ம் ஆண்டுவரை பெற்றுள்ளார். இந்த நிலையில், அரசு அதிகாரிகளுக்கு அவர் அளித்த நிலப்பத்திரம், வருமானவரிச் சான்றிதழ்ஆகியவற்றின் மீது சந்தேகம் வந்தது. எனவே அதனை சரி பார்த்தனர். அப்போது அவை அனைத்தும்போலியானவை எனத் தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவர் மில் அமைப்பதாகக் கூறிய சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவில் உள்ள கத்தேரிஎன்ற இடத்திற்குச் சென்றனர். அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது அவர் வெறும் கட்டடம் மட்டுமே கட்டிவைத்திருப்பது கட்டி அதிர்ந்தனர்.

மேலும், உள்ள இருந்த 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் காணாமல் போயிருந்தன. இதனையடுத்துகடன் பெற்ற வரதராஜூ, அவரது மனைவி உஷா, பங்குதாரர் சீனிவாசன் ஆகியோர் மீது அதிகாரிகள் புகார்செய்தனர். இந்தப் புகாரையடுத்து அவர்கள் திடீரென தலைமறைவாகினர்.

பெருமளவு மோசடி என்பதால் இந்த வழக்கு தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+