ஜூனில் இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இந்தியா வருகை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

ஜூன் முதல் வாரம் இந்தியா வரவுள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே நார்வேதூதுக்குழுவினரின் செயல்பாடுகள், புலிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகுறித்து பிரதமர் வாஜ்பாயிடம் தெரிவிப்பார்.

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே ஜூன் மாதம் 2 ம் தேதி முதல் மூன்று நாட்கள்சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா வரும் இவர் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசுவார்.

அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசுவார். வாஜ்பாய், சோனியா தவிர வேறுசில அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசுவார் ரனில் விக்ரமசிங்கே. தனது இந்தியவருகையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு ஜூன் 4 ம் தேதிநடக்கிறது.

ரனில் விக்ரமசிங்கேவின் இந்திய வருகை, இலங்கை இனப்பிரச்சனையை இந்தியாவின் உதவியுடன் விரைவில்முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்தன.

முன்னதாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்று இலங்கையில்அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+