காஷ்மீரில் சண்டை நிறுத்தம் வாபஸ்
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 6 மாதமாக இருந்து வந்த சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து துபாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் வாஜ்பாய் நல்லெண்ண அடிப்படையில், முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் (நவம்பர் மாதம்28ம் தேதி )முதல் ஜம்மு -காஷ்மீர் பகுதியில் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருந்தார்.
சண்டை நிறுத்தம் மே மாதம் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டது ஆனால் சண்டை நிறுத்தத்தை எந்த தீவிரவாதஅமைப்பும் ஏற்க முன் வரவில்லை. அவர்கள் தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கையிலும் தாக்குதலில் ஈடுபட்டுவந்தனர்.
சண்டை நிறுத்தம் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?என்ற கேள்வி நிலவி வந்தது. ஆனால் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதில்லை என மத்திய அரசு முடிவு செய்தது.
வியாழக்கிழமை நள்ளிரவுடன் சண்டை நிறுத்தம் முடிவடைந்ததால் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைதேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்புப் படையினர் காஷ்மீர் பகுதியில் வீடு, வீடாக சென்று தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். அந்தபகுதியில் வரும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. பயணிகள் அனைவரும்பலத்த சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
வடக்கு காஷ்மீர் பகுதியான பாரமுல்லாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கையில், வெர்னார், குர்சோ, குப்வாரா,சோகாம், சடேர்கோட், குல்காம், க்ரால்போரா, சத்ரா, வாட்டர்காம் மற்றும் ஹரி பகுதிகளை பாதுகாப்புப் படையினர்வெள்ளிக்கிழமை காலை சுற்றி வளைத்தனர்.
இந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் வீடு, வீடாக சென்று தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டை நிறுத்தம் அமலில் இருந்த 6 மாதங்களில் இந்திய எல்லையிைல் பாகிஸ்தான் படைகள் எந்த விதமானதாக்குதலிலும் ஈடுபடவில்லை. அங்கு 6 மாத காலமாக அமைதி நிலவி வந்தது.
சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட பின்னும் அங்கு தொடர்ந்து அமைதி நிலவி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications