For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுவர்களை கொத்தடிமைகளாக்கிய எஸ்டேட் அதிபர்

By Staff
Google Oneindia Tamil News

நீலகிரி:

அதிக சம்பளம் தருவதாக ஏமாற்றி 14 சிறுவர்களைக் கொத்தடிமைகளாக மாற்ற முயன்ற எஸ்டேட் அதிபரைப்போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கருக்கியூர் உள்ளது. இங்கு வேன் ஒன்றுடன் வந்த ஒரு நபர், அங்குள்ள சிறுவர்களிடம்வால்பாறை எஸ்டேட்டில் வேலை இருப்பதாகவும், நாள் ஒன்றிற்கு ரூ.90 சம்பளம் கிடைக்கும் என ஆசைகாட்டியுள்ளார். இதை நம்பிய 14 சிறுவர்கள் வேனில் ஏறிச் சென்றனர்.

வால்பாறை சென்றவுடன் அவர்களுக்குப் போதுமான உணவு மற்றும் இருப்பிட வசதி அளிக்கப்படவில்லை. ஒருவார காலம் பொறுமையாக வேலை பார்த்த இந்த சிறுவர்கள், திடீரென போர்க்கொடி தூக்கினர்.

தாங்கள் வேலை பார்த்ததற்கான சம்பளத்தைக் கேட்டுள்ளனர். அதற்கு, வேனில் உங்களை அழைத்து வந்தசெலவுக்கும் இதற்கும் சரியாகி விட்டது என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுவர்களில் 3 பேர் , அங்கிருந்து தப்பி, கோவைக்கு நடந்தேவந்து சேர்ந்தனர்.

இவர்களைப் பற்றி அறிந்த போலீசார், கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அவர்களை அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, மீதமுள்ள சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X