கோவை பங்குச் சந்தைக்கு வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவைப் பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் அருகே பங்குச் சந்தைக் கட்டடம் உள்ளது. இங்கு அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்கள் ஆகியவைசெயல்பட்டு வருகிறது. இந் நிலையில் இங்கு ஒரு டெலிபோன் மூலம் பங்குச் சந்தையைச் சேர்ந்த ஒருவருக்கு வெடிகுண்டுமிரட்டல் வந்தது.
இது குறித்து அந்த ஊழியர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். மோப்பநாய்களும் இந்த சோதனையில் ஈடுபட்டன. ஆனால்,வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications