சிறையில் ரங்கநாதனை சந்திக்க முடியாமல் சிதம்பரம் தவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமாகா ஜனநாயகப் பேரவை எம்எல்ஏ ரங்கநாதனைச்சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார் அப்பேரவை நிறுவனர் ப. சிதம்பரம்.
ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறைச்சாலையில்அடைக்கப்பட்டுள்ளார் ரங்கநாதன். அவரைச் சந்திப்பதற்காக திங்கள்கிழமை மாலை சிதம்பரம் சிறைச்சாலைக்குச்சென்றார்.
ஆனால், போதிய முன் அனுமதிக் கடிதம் தராத காரணத்தால், சிறையின் உள்ளே சிதம்பரத்தை அனுமதிக்க சிறைஅதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் சிதம்பரம் ஏமாற்றத்துடன் திரும்பினார்.












Click it and Unblock the Notifications