இலங்கையில் 8 தமிழக மீனவர்கள் கைது
கொழும்பு:
தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததற்காக இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இலங்கையின் பாதுகாப்புத் துறை செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாதம் 2ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 8மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில், யாழ்ப்பாணம் பகுதியில் இளவெட்டிவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற் பகுதியில் அத்து மீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் மாதம் 18ம் தேதி, மே மாதம் 11,12 ஆகிய தேதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 39 மீனவர்கள் இலங்கைகடற்பகுதியில் அத்து மீறி நுழைந்தததற்காக கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து விடும் அபாயம் இருப்பதால்இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கைது செய்யப்படுகிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை கடற்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தகாரணம் கொண்டும் இந்திய மீனவர்கள் யாரையும் சுடக்கூடாது என கடற்படை வீரர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
சில தினங்களுக்கு முன் இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த்ரா ராஜபக்சே, மத்திய அமைச்சர்நிதிஷ்குமரை சந்தித்து மீனவர்கள் பிரச்சனையை தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications