For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது விடுதலைடப்புலிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கிழக்கு பட்டிகோலா மாவட்டத்தில், வடமராச்சிக்கு தென்கிழக்கே 2கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லிம் கிரமமான காவத்துமுனையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குஇந்த தாக்குதல் நடந்தது.

அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தினர்.இதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

வடமராச்சியின் ராணுவ தலைமையகத்திலிருந்து சம்பவ பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்என்றனர்.

சிறப்பு அதிரடிப் படையினர் அம்பாரா மாநிலத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமின் மீது தாக்குதல் நடத்தி14க்கும் மேற்பட்ட விடுதலை புலிகளை கொன்றனர். விடுதலை புலிகளின் இந்த தாக்குதல் அந்த தாக்தல்நடந்ததற்கு அடுத்த நாள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் கூறுகையில், விடுதலைப்புலிகளின் முகாமின் மீது நடந்த தாக்குதலில்20க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர் என்றனர்.

சில தினங்களுக்கு முன்பு புலிகள் திருகோணமலைக்கு அருகே பேருந்து ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில்,இலங்கை கடற்படையைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X