For Daily Alerts
Just In
காயிதே மில்லத்தை நினைவு கூர்ந்தது தமிழகம்
சென்னை:
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தின் தந்தை காயிதே மில்லத்தின் 106-வது பிறந்த நாள் சென்னையில்செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
காயிதே மில்லத்தின் பிறந்த நாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் அமைந்துள்ளகாயிதே மில்லத் சமாதியில், தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் சென்றிருப்பதால், அவருக்குப் பதிலாக தமிழக அரசின் சார்பில்அமைச்சர்கள் பொன்னையன், சரோஜா, வளர்மதி, பாண்டுரங்கன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
திமுக தலைவர் மு.கருணாநதி மலர்ப் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், தமிழக ஐக்கிய ஜமாத் தலைவர் ஜே.எம்.ஹாரூண், இந்திய தேசிய லீக்கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் ஆகியோர் உள்பட பல தலைவர்களும் காயிதே மில்லத் நனைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர்.
Comments
Story first published: Tuesday, June 5, 2001, 5:30 [IST]