தேயிலை விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
தேயிலை விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெற்றது.
கடந்த ஆண்டு சிறு தேயிலை விவசாயிகள் போதிய விலை கோரி போராட்டம் நடத்தினர். அப்போது நீலகிரியில்பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அரசு பஸ்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. சாலை மறியல்பல இடங்களில் நடந்து.
இதைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடிப் பிரயோகம் நடத்தினர். அப்போது பலர் காயமடைந்தனர். சிலரைப்போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர். திமுக ஆட்சியில் இது நடந்தது.
தற்போது அவர்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என விவசாயிகள் கோரினர். இதனை ஏற்றுதேயிலை விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை அதிமுக அரசு பதவி ஏற்றவுடன் வாபஸ் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications