"தமிழகத்தின் பெருமையைக் கெடுத்து விட்டார் பாத்திமா பீவி
சென்னை:
தமிழகத்தின் பெருமையை ஆளுநர் பாத்திமா பீவி கெடுத்து விட்டார் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம்பேசுகையில், தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தன்மூலம் மாநிலத்தின் பெருமையைக் கெடுத்து விட்டார்.
ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது விவாதத்தைக் கிளப்பி விட்டு விட்டது. இது ஒரு குறையாக மாறிவிட்டது. இந்த நிலையில், ஆளுநர் மீதான வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆளுநர் மீது யாரும் வழக்குத் தொடர முடியாது என்று கூறி வந்தவர்களின் வாதம் செல்லாததாகிவிட்டது.
தன் மீதான வழக்கை விசாரிக்க நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து உடனடியாக தனது பதவியைபாத்திமா பீவி ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அப்படிச் செய்யாவிட்டால், குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன், ஆளுநர் பாத்திமா பீவியை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்சுப்பிரமணிய சுவாமி.