தாமரைக்கனி மதுரை சிறையில் அடைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சென்னையில் கைது செய்யப்பட்ட தாமரைக்கனி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தாமரைக்கனி அதிமுகவில் சீட் கிடைக்காததையடுத்து சுயேச்சையாகப்போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரது மகன் இன்பத்தமிழன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணன், சுயேச்சை கவுன்சிலர் சந்தான மூர்த்தி ஆகியோரை மிரட்டியதுதொடர்பாக அவர் மேல் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சென்னையில் இருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் சென்னை சென்று அவரைக் கைதுசெய்தனர். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கொண்டு வரப்பட்டார்.
போலீஸார், அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தினர். அவர் 15 நாட்கள் காவலில்வைக்கப்பட்டார். அப்போது தாமரைக்கனி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் காட்டவேண்டும் என்றும் தனது வக்கீல் கோபால் மூலம் மாஜிஸ்ட்ரேட்டிடம் மனுக் கொடுத்தார்.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு போதிய டாக்டர்கள் இல்லாதகாரணத்தால் அவர் மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில்அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications