கோவை குண்டு வெடிப்பு வழக்கு: விசாரணை ஒத்தி வைப்பு
கோவை:
1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை இந்த மாதம் 12ம்தேதிக்கு ஒத்தி வைத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
1998ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர்காயமடைந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைகோவை சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 160 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத் தலைவர் பாஷா, மக்கள் ஜனநாயககட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 5 பேர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்திற்குவரவில்லை.
மதானி காய்ச்சல் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இதையடுத்து வழக்கை இந்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications