For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததை நிறைவேற்றும் வகையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதமிழக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசு உறுதியளித்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மாசடைந்து கிடக்கும் தமிழகத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. ஆனாலும்மக்கள் துணையின்றி இத்திட்டம் வெற்றி அடையாது. ஆகவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடாகக் கருதப்படும் பிளாஸ்டிக் போன்ற திரும்பவும் உபயோகப்படுத்த முடியாத பொருட்களை ஆள் நடமாட்டம், மக்கள்பழக்கவழக்கம் இல்லாத பகுதிகளில் கொண்டு போய்தான் எரிக்க வேண்டும். மண்ணோடு மண்ணாக மட்கிப் போகும் தன்மையுள்ள பொருள்களைப்பயன்படுத்தினால்தான் நாம் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்தவர்களாவோம்.

கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிக அளவில் சுற்றுச்சுழல் மாசடைந்துள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் அறிவியல்நிறுவனங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான புதிய பல திட்டங்களைக் கண்டறிய வேண்டும். இதற்காக, அவர்களுக்குத் தேவையான அனைத்துஉதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்றார் திருநாவுக்கரசு.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X