சென்னையில் ஓய்ந்தது; வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வந்த அடைமழை புதன்கிழமை சற்று ஓய்ந்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் புயல் சின்னமாகி சென்னைக்கு அருகே மையம்கொண்டிருப்பதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கடந்தநான்கு நாட்களாக அடைமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை சென்னையில் மழை சற்று ஓய்ந்தது. காலை 10 மணி வரை மேக மூட்டமாக இருந்தசென்னை நிகரில், 10 மணிக்கு மேல் லேசாக வெயில் அடித்தது. மழையும் இல்லை. லேசான தூறல் மட்டுமே சிறிதுநேரத்திற்கு இருந்தது.
இதற்கிடையே, இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.சென்னையில் மழை இல்லாவிட்டாலும் கூட, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications