ரேஷன் கடைகளில் அமைச்சர் திடீர் சோதனை
சென்னை:
ரேஷன் கடைகளில் தரம் குறைவான அரிசி வழங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கூட்டுறவுத்துறை அமைச்சர்தனபால் தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
ரேஷன் கடைகளில் எடை குறைவாக பொருட்கள் வழங்கக் கூடாது எனவும் அவர் ஊழியர்களை எச்சரித்தார்.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான பொருட்கள் ரேஷன் கடைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.முறைகேடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் தனபால் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், திட்ட இணைப்பதிவாளர்கள் ஆகியோருடன் சென்னிையிலுள்ள ரேஷன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது உணவு பொருட்கள் வழங்கும், ரேஷன் கடைகளையும், மண்ணெண்ணை விற்பனை நிலையங்களையும்பார்வையிட்டார்.
பல ரேஷன் கடைகளில் தரம் குறைவான அரிசி வழங்கப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு நல்ல அரிசிவழங்க ஏற்பாடு செய்தார்.
பல ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி இருப்பில் இல்லை. உடனடியாக நுகர்வோர் வாணிபக் கழகத்திலிருந்துஅரிசி வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ளவும் உத்தரவிட்டார்.
எடை குறைவாக பொருட்கள் கொடுப்பதை ரேஷன் கடை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் என ஊழியர்களைகடுமையாக எச்சரித்தார் அமைச்சர் தனபால்.












Click it and Unblock the Notifications