ஜூன் 11 முதல் பாலிடெக்னிக் விண்ணப்பம்
சென்னை:
வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் தமிழக அரசு பாலிடெக்னிக்குகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள்வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஞானம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2001-2002ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் முதலாண்டு பட்டய மாணவர் சேர்க்கை அந்தந்தப்பாலிடெக்னிக்குகளிலேயே தனித்தனியாக நடைபெறும்.
ஜூலை 3ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. சம்பந்தப்பட்டபாலிடெக்னிக் முதல்வரின் பதவிப் பெயரில் குறுக்குக் கோடிட்ட கேட்புக் காசோலையைக் கொடுத்துவிண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழஙகப்படும். இவர்கள் தங்கள் சாதிச்சான்றிதழைக் காண்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிக்கை ஜூன் 10ஆம் தேதி செய்தித் தாள்களில் வெளியாகும்என்று கூறியுள்ளார் ஞானம்.












Click it and Unblock the Notifications