For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமாகாவின் அறிவியல் யோசனை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ஆண்டுக்கு ரூ.8,500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தமுடியும் என த.மா.கா.வின் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.

கோவையில் த.மா.கா.வின் மாநில அறிவியல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமெரிக்கா நாராயணன் இதுகுறித்து கூறியதாவது:

த.மா.கா.வின் சார்பாக கோவையில் சுற்றுச் சூழல் வாரம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், வி.கே லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காற்றில் மாசு ஏற்படுவதைக் குறைக்க பெட்ரோலுடன் எத்தனால் பயன்படுத்தலாம். சாதரணமாக பெட்ரோலுடன் 10சதவீத எத்தனாலைப் பயன்படுத்தாலாம். ஆண்டுக்கு ரூ.85,000 கோடி அளவிற்கு பெட்ரோல் இறக்குமதிசெய்யப்படுகிறது. இதில் 10 சதவீத எத்தனாலைப் பயன்படுத்துவதன் மூலம் ரூ.8,500 கோடி அந்நியச்செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.

எத்தனால் தயாரிக்கப் பயன்படும் கரும்பு கழிவும் பயனுள்ளதாக அமையும். இதற்கான வருவாய் விவசாயிகளைச்சென்றடையும். எனவே இது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X