For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ரயில் கொள்ளையர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தாம்பரம் அருகே 5 ரயில் கொள்ளையர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

சமீபகாலமாக வட மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.இதையடுத்து ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ரயில் கொள்ளையர்களைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் தங்கராஜுக்கு செவ்வாய்க்கிழமை இரவு போன் வந்தது. அதில்பேசிய போலீஸ் உளவாளி ஒருவர், தாம்பரம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே சிலர் ரகசிய திட்டம் தீட்டிவருவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் படையுடன் இன்ஸ்பெக்டர் அங்கு விரைந்தார். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 5 பேரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணை கடத்தியதில் அவர்கள் ரமேஷ் (27), மோகன்(25), கார்த்திக் (29), ராஜா (26), மதியழகன் (21) என்பது தெரிய வந்தது. இவர்களில் கார்த்திக் திருச்செந்தூரைச்சேர்ந்தவர். மற்றவர்கள் சென்னைவாசிகள்.

இவர்கள் அனைவரும் ரயில்களில் பெண்களிடம் நகைப் பறிப்பு, பணம் திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X