பாத்திமா பீவியை நீக்க மாட்டோம்: அத்வானி
சென்னை:
தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர்எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
சென்னை வர்த்தக சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அத்வானி வெள்ளிக்கிழமை காலைவிமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ஜெயலலிதாவைதமிழக முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்த பிரச்சனை தொடர்பாக தமிழக ஆளுனர் பாத்திமா பீவியைநீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
இது குறித்து பிரதமர் வாஜ்பாய் முன்னரே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாத்திமா பீவியை நீக்கமுடியாது என கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் முடிவை தமிழக ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.இதில் மத்திய அரசுக்கு எந்த விதமான பங்கும் கிடையாது. இந்த பிரச்சனை குறித்து நீதிமன்றம்தான் தீர்ப்பு வழங்கவேண்டும். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
காஷ்மீரில் சர்வதேச பார்வையாளர் கண்காணிப்பில் தேர்தல் நடத்த வேண்டும் எண ஹூரியத் அமைப்புகூறியுள்ளது. அதுபோல் சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தேர்தல் நடத்த முடியாது.இந்தியா, காஷ்மீரில் நல்ல முறையில் தேர்தலை நடத்தியுள்ளது.
எனது சென்னை பயணத்தில் எந்த விதமான அரசியல் நோக்கமும் இல்லை என்றார். அத்வானி வர்த்தக சபைகூட்டத்திற்கு பின் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து பேசவுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications