மீண்டும் இங்கிலாந்து பிரதமராகிறார் டோனி பிளேர்
லண்டன்:
இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து மீண்டும் இங்கிலாந்தின் பிரதமராக டோனி பிளேர் பதவியேற்கிறார். இங்கிலாந்தில் மொத்தம் உள்ள659 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 634 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 413 தொகுதிகளை பிரதமர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சிபெற்றுள்ளது. எதிர்க்ட்சித்தலைவர் வில்லியம் ஹேக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 164 இடங்களைப் பெற்றுள்ளது.லிபரல் டெமாக்ரடிக் கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
டோனி பிளேருக்கு வாழ்த்து:
தொழிலாளர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் வில்லியம்பிரதமர் டோனி பிளேரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற பிரதமர் டோனி பிளேர் கூறுகையில், கடந்த வருடங்களில் எப்படி இங்கிலாந்தின்முன்னேற்றத்துக்குப் பாடுபட்டேனோ அதே போல் இனிமேலும் பாடுபடுவேன். இங்கிலாந்து உலகத் தரம் வாய்ந்தநாடாக மாற்றுவதுதான் எனது குறிக்கோள்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் மேலும், மேலும் முன்னேறுவதற்கும், நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம்தீர்வதற்கும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர் கட்சித் தொண்டர்கள் மேற்கொள்வர்.
இதுதவிர கல்வித்துறை, போக்குவரத்துத்துறை, சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வழிவகைகள்செய்து கொடுக்கப்படும். நாட்டில் குற்றங்கள் பெருகுவதைத் தடுக்கவும், குற்றவாளிகளின் செயல்பாடுகளைக்குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
1918 ம் ஆண்டு நடந்த தேர்தலில் 55 சதவீத வாக்காளர்களே வாக்களித்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. தற்போது 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.