சென்னையில் கோஷ்டி மோதல்: வெடிகுண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் வியாழக்கிழமை இரவு இரு கும்பல்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் முத்துராமன் தெருவைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகளுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறுஏற்பட்டது. இதையடுத்து சுமார் இரவு 11 மணியளவில் இரு கோஷ்டியினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
இந்த மோதலின்போது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை மறு கோஷ்டி மீது வீசினர்.இதில் 2 பேருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications