For Daily Alerts
Just In
கரூரில் இலவசமாய் கிடைக்கும் திருக்குறள் புத்தகம்
கரூர்:
ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள திருக்குறள் புத்தகங்களை இலவசமாக வழங்க கரூர் திருக்குறள் பேரவை முடிவுசெய்துள்ளது.
கரூரில் திருக்குறள் பேரவைச் செயலர் பழனியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருக்குறள் பேரவை சார்பாக புதிய திருக்குறள் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகத்தின் வெளியீட்டுநாளில், 500 புத்தகங்களை இலவசமாக வழங்க உள்ளோம்.
இவை அனைத்தும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறஇது உதவும். இந்த புத்தகங்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.
புத்தக வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகங்களை குன்னக்குடி பொன்னம்பல அடிகள்வெளியிடுகிறார். புத்தகத்தின் அட்டையில் கன்னியாகுமரியில் இடம் பெற்றுள்ள 133 அடி உயர வள்ளுவரின்சிலையின் படம் இடம் பெறும் என்றார் அவர்.
Comments
Story first published: Friday, June 8, 2001, 5:30 [IST]