வீரப்பன் விவகாரம்: ஜெ.- கிருஷ்ணா ஆலோசனை
பெங்களூர்:
சந்தன மரக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தொலைபேசி மூலம் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து வியாழக்கிழமை கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில், வீரப்பனை பிடிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு பேசியுளாார்.
இது குறித்து நான் கர்நாடக முதல்வரிடம் இனிமேல்தான் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன்.
வீரப்பனை பிடிக்கும் பணிக்கு ஓய்வு பெற்ற டி.ஜி.பி.தேவாரத்தை, ஜெயலலிதா நியமித்துள்ளார். அவரும் தனதுநிறைவேறாத பணியை நிறைவேற்றி முடிப்பேன் என கூறியுள்ளார்.
இணை அதிரடிப்படை அமைக்கப்பட்ட பின் வீரப்பன் பிடிபடுவான் என்ற நம்பிக்கையில்தான் செயல்பட்டுவருகிறோம்.
கர்நாடக அதிரடிப்படைக்கு இளைஞரான ஐ.ஜி.கெம்பையாவை நியமித்துள்ளோம். இளம் வயது அதிகாரிகள்பணிகளை விரைந்து. சிறப்பாக செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே ஓய்வு பெற்றவர்களைப்பற்றி சிந்திக்க தேவையில்லை.
வீரப்பனை பிடிக்கும் பணியில் கர்நாடகம் இரண்டாவதில்தான் இருக்கிறது என புகார் கூறப்படுவது தவறு. கூட்டுநடவடிக்கையின் போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டக்கூடாது.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது அது எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என பார்க்கலாம்.
வீரப்பனை பிடிக்கும் விஷயத்தில் எல்லை பாதுகாப்புப்படையை அனுப்பி மத்திய அரசு இருமாநில அரசுக்கும்உதவி செய்துள்ளது. இதை வேண்டாம் என கூற இயாது என கூறினார்.