For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கல் காளவாயிலிருந்து 19 கொத்தடிமைகள் விடுவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல் காளவாயில் வேலை செய்து வந்த 19 கொத்தடிமைகளை காளவாய்அதிபர்கள் விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்டவர்களில் 9 பெண்கள், 5 சிறுவர்கள் அடங்குவர்.

செங்கல்பட்டு அருகே உள்ள செங்கல் சூளவாயில் பல தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகதன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று போலீசில் புகார் கொடுத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் செங்கல்பட்டு அருகேயுள்ளசெங்கல் காளவாயில் பல தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவது தெரிந்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு சென்று செங்கல் காளவாய் உரிமையாளர் ரூ 15, 000 கொடுத்துகொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்தவர்களை மீட்டார். மீட்கப்பட்ட கொத்தடிமைகளை விசாரணை நடத்தியதில்இவர்கள் அனைவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றுதெரிய வந்தது.

செய்த வேலைக்குக் கூலி எதுவும் கொடுக்கப்படாமல் இவர்கள் அனைவரும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவருவது தெரிந்தது.

செங்கல் காளவாயில் வேலை செய்து வந்த அழகம்மாள் என்ற பெண் 10 நாட்களுக்கு முன் பசி தாங்க முடியாமல்இறந்தார். அடுத்த சில நாட்களில் பஞ்சம்மாள் என்ற பெண்ணும் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

புதுக்கோட்டையிலுள்ள கிராம மேம்பாட்டுச் சங்கத்தினர் மாவட்டக் கலெக்டர் ராஜாராமுக்கு மனுக் கொடுத்துகொத்தடிமைகளை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X