டாக்டர் ஜோடியை சேர்த்து வைத்த அமைச்சர்
சேலம்:
ண்அரசு டாக்டர்களாக இருக்கும் தம்பதியினர் ஒரே இடத்தில் பணியாற்றலாம் என மாநில சுகாதரத் துறை அமைச்சர்செம்மலை அறிவித்துள்ளார்.
கரூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பார்வையிட்ட அமைச்சர், பல்வேறுஅதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
ஒரு கிராமத்தில், 8 மணிக்கு வரவேண்டிய டாக்டர் 9 மணிக்குத் தாமதமாக வந்தார். அவரிடம் விசாரணைமேற்கொண்டார் அமைச்சர்.
அப்போது அந்த டாக்டர், தான் சேலத்திலிருந்து வர வேண்டியிருந்ததாகவும், தன் மனைவி சேலத்தில் பணியாற்றிவருவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட அமைச்சர், அந்த டாக்டருடைய மனைவியையும் அதே கிராமத்திற்குமாறுதல் செய்து உத்தரவிட்டார்.
மேலும், டாக்டர்களாக இருக்கும் தம்பதியினர் கிராமப் புறங்களில் இனி இணைந்தே பணியாற்றலாம்; அவ்வாறுபணியாற்ற வசதியாக இருவரையும் ஒரே இடத்திற்கு மாறுதல் செய்யலாம் என உயர் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார் அமைச்சர் செம்மலை.












Click it and Unblock the Notifications