கைதாவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்: ஸ்டாலின்
சென்னை:
போலீஸார் தன்னைக் கைது செய்ய வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர் தெய்வசிகாமணியிடம் கமிஷன் வாங்கிய வழக்கில், ஸ்டாலின் மீதும் திமுகவின்முன்னாள் எம்பி பரசுராமன் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், பரசுராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக, ஸ்டாலின் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று 15 நாட்களாகவே பரபரப்புநிலவி வருகிறது. தன்மீது தொடரப்படும் எந்த வழக்கையும் நீதிமன்றத்தில் சந்திப்பதற்குத் தயாராக இருப்பதாகஸ்டாலின் சட்டசபையிலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு வியாழக்கிழமை வந்த ஸ்டாலின், மாநகராட்சி கமிஷனருடன்ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வெளியே வந்ததும், "போலீஸார் உங்களை எந்த நேரத்திலும் கைதுசெய்ய வருவார்கள் என்று வதந்தி உலவுடிகிறதே" என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ஸ்டாலின், "போலீஸாரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என்று ஒரேவரியில் பதிலளித்து விட்டுச் சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications