கருணாநிதிக்கு ம.தி.மு.க. வக்கீல் நோட்டீஸ்
சென்னை:
ம.தி.மு.க.பொதுச் செயலாளரின் வழக்கறிஞர்களும், அக் கட்சி தலைவர் எல். கணேசனும் தி.மு.க. தலைவர்கருணாநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க தோல்லவியடைந்ததற்கு ம.தி.மு.க.தான் காரணம் என கருணாநிதி குற்றம்சாட்டியிருப்பதை எதிர்த்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
நாளிதழ் ஒன்றுக்கு கருணாநிதி அளித்த பேட்டியில், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.தோல்வியடைந்ததற்கு ம.தி.மு.ககான் காரணம், ம.தி.மு.கவினர் 8 மாதத்திற்கு முன்பே அ.தி.மு.கவுடன் ஒப்பந்தம்செய்து கொண்டு தி.மு.கவை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணியை முறித்துக்கொண்டனர் என கூறியிருந்தார்.
இதை ம.தி.மு.க. வன்மையாக கண்டித்திருக்கிறது. இதை எதிர்த்து அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீசின் நகல்பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:
தி.மு.க. தலைவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை. ம.தி.மு.கவின் பெருமையை பாதிக்கும்நோக்கத்துடனும், ம.தி.மு.க.தலைவர்களின் புகழை குறைக்கும் எண்ணத்துடனும் கருணாநிதி இந்தக் கருத்தைகூறியிருக்கிறார்.
இந்த கருத்துக்கு 1 வார காலத்திற்குள் அவர் பத்திரிக்கை மூலமாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் 1வார காலத்திற்குள் மன்னிப்பு கேட்க தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனகூறப்பட்டுள்ளது.