நர்சுகளை எதிர்த்து கோவையில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

பிரசவித்த பெண்ணிடம் ரூ. 250 பணம் பெற்ற நர்சுகள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி அரசு மருத்துவமனைமுன்பு பெண்கள் முற்றுகையிட்டனர்.

கோவை, மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை உள்ளது. இங்குவெல்லித் துறையைச் சேர்ந்த அய்யப்பன் பட்டீஸ்வரி(22) என்பவர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

பிரசவம் முடிந்ததும், அவரிடம் நர்சுகள் ரூ. 250 பணம் கேட்டுள்ளனர். இந்த பணத்தை 3 பேரும் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதை அறிந்த ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் பொதுமக்களைச் சமாதனப்படுத்தினர். மேலும் 3 நர்சுகளிடமிருந்து 250ரூபாயைத் திருப்பி வாங்கித் தருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+