For Daily Alerts
Just In
திருவாரூரில் கோஷ்டி பூசல்: போலீசார் உட்பட 4 பேர் காயம்
திருவள்ளூர்:
திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடந்த கோஷ்டி தகராறை தடுக்கச் சென்ற 3போலீஸ்காரர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
ராஜமோகன் (22) என்பவரை சிலர் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தினருகேதாக்கினர். இதையடுத்து ராஜமோகனை தாக்கியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த 200பேர் கொண்ட கும்பல் ஆக்ரோஷமாக கிளம்பியது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார் கலவரம் எதுவும் நடக்காமல் தடுக்கஅங்கு விரைந்து சென்றனர்.
ஆனால் போலீசைக் கண்டதும் கோபமடைந்த கும்பல் போ போலீசை தாக்கத்தொடங்கியது.
இந்தத் தாக்குதலில் போலீஸ் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது. தாக்குதலில் போலீசார் 3காயமடைந்தனர்.
அங்கு வந்த பால்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
இச் சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்த பகுதியில்பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, June 9, 2001, 5:30 [IST]