தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
காண்ட்ராக்டரை மிரட்டியதாகக் கூறப்பட்ட வழக்கில் தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. பரசுராமனை ஜாமீனில்விடுதலை செய்ய முடியாது என்று சென்னை செசன்சு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரோடு காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவர் கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒருபுகார் கொடுத்தார். தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. பரசுராமன் சிபாரிசில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்பகுதிகளில் ரோடு போட ரூ.15 கோடிக்குக் காண்ட்ராக்ட் எடுத்ததாகவும், இதற்காக 5 சதவிகித கமிஷன்பரசுராமனுக்குக் கொடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், 5 சதவிகிதம் போதாது என்றும் மேலும் 5 சதவிகிதம் கமிஷன் வேண்டும் என்று தெய்வசிகாமணியைப்பரசுராமன் மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார். இது தவிர, 10 பேர் தன்னைக் காரில் கடத்தி, கொலை மிரட்டல்செய்தனர் என்றும் தெய்வசிகாமணி தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, கடந்த மே 26ஆம் தேதி பரசுராமன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு பரசுராமன் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், இவ்வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று போலீஸ்தரப்பில் கூறப்படுவதால், பரசுராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தீர்ப்பு கூறினார்.
இதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 22ஆம் தேதி வரை பரசுராமனின் காவலை நீடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கில் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.