திருப்பூர் வங்கியில் கொள்ளை முயற்சி
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூர் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்த கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 12 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் தப்பியது.
திருப்பூரில் உள்ள விஜயா பாங்கில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்தக் கொள்ளை முயற்சியில் 5 பேர்ஈடுபட்டுள்ளனர். இவர்கள், ஜன்னலை உடைத்து நகைகளைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதற்காக கேஸ் வெல்டிங் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், உள்ளே இருந்த பாதுகாப்பு அறையை கேஸ்வெல்டிங் முறையில் உடைக்க இயலவில்லை.
எனவே, இதையடுத்து கொள்ளையடிக்கும் முயற்சியைக் கும்பல் கைவிட்டு விட்டு கும்பல் தப்பிச் சென்றது. இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications