40 மலைக்கிராமங்கள் தத்தெடுப்பு
கோவை:
தமிழகம் மற்றும் கேரளத்தில் 40 மலைக் கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகளைமேம்படுத்த "ஆர்ஷா வித்யாலயா குருகுலம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் நூறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க குருகுலம் உட்பட பல்வேறு ஆன்மீக இயக்கங்களைஒன்றிணைத்து "ஆச்சார்யசபா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதற்கான முயற்சியினை முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் துவக்கினார். தற்போது இதன்தலைவராக சுவாமி தயானந்த சரஸ்வதிகள் உள்ளார்.
இந்த சபையின் கீழ் இயங்கும் ஆர்ஷா வித்யாலயா, கிராமங்களைத் தத்தெடுத்து சேவைகளை செய்ய முடிவுசெய்தது. இதன்படி தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மலைக்கிராமங்களைத் தேர்வு செய்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக 40 மலைக்கிராமங்களை இது தத்து எடுக்கிறது. இந்த கிராமங்களில் அடிப்படைவசதிகளான குடிநீர் வசதி, கல்வி, மருத்துவம் ஆகிய பணிகளை ஆர்ஷா வித்யாலயா மேற்கொள்ளும்.
இது தவிர, தற்போது 12 கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்கி கல்விப் பணியைத் தொடங்கியுள்ளதுஆர்ஷா வித்யலாயா.












Click it and Unblock the Notifications