வழக்கில்லாத முஸ்லிம் கைதிகளை விடுவிக்க ஜெ. உறுதி
சென்னை:
தமிழகத்திலுள்ள பல சிறைகளில் வழக்கில்லாமல் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிறுபான்மையின கைதிகளைவிடுவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளதாக தமாகா எம்எல்ஏவான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகம் முழுவதிலும் உள்ள பல சிறைகளில் நூற்றக்கணக்கான முஸ்லிம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலான கைதிகள் மீது எந்தவிதமான வழக்கும் தொடரப்படவில்லை.
தங்கள் மேல் வழக்கு ஏதும் இல்லாத நிலையில் இவர்கள் ஏன் சிறையிலேயே வாட வேண்டும்? ஆண்டுக் கணக்கில்சிறைக் கொடுமையை இவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இதனால் இவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்துக் கூறினேன். அவரும் இது சம்பந்தமாக, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்துள்ளார் என்று கூறினார் பாலசுப்ரமணியன்.
முன்னதாக, தமிழகத்திலுள்ள பல சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகளை கொடுமைப்படுத்தியதுதொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், முன்னாள்டி.ஜி.பி. சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர அதிமுகவின் 117வது வார்டு செயலாளராக உள்ள ப்ரீத்தி பாஸ்கர் என்பவர்தான் இதற்கானமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கான விசாரணையை ஆகஸ்டு 10ஆம் தேதிக்குள் முடித்து, அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சென்னை 7வது பெருநரகமாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.