வழக்குகளை சந்திப்பேன்: கருணாநிதி
சென்னை:
திமுக ஒரு பயந்தாங்கொள்ளிக் கட்சியல்ல; இளைத்துப் போன கட்சியுமல்ல. எந்தப் புகாரையும், வழக்கையும்சந்திக்கத் தயார் என்று கூறினார் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி.
சென்னை அறிவாலயத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக மீது வழக்குப் போடுகிறார்கள் என்றால், அதை திமுக சந்திக்கும். திமுக ஒன்றும் இளைத்துப் போன கட்சியல்ல.இக்கட்சி பயந்தாங்கொள்ளிக் கட்சியும் கிடையாது.
முஸ்லிம் கைதிகளைச் சிறையிலே அடித்ததாக என் மீதும், சில உயர் அதிகாரிகள் மீதும் புகார் செய்யப்பட்டு, முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. யாரைவிட்டு வேண்டுமானாலும் புகார்செய்யட்டும். எந்த வழக்கை வேண்டுமானாலும் போடட்டும். சட்டப்படி அவற்றைச் சந்திக்க நான் தயார்.
ஆனால் இதைப் பற்றி விரிவாக விவாதிக்க நான் இப்போது விரும்பவில்லை. வழக்கு வரட்டும். பார்க்கலாம்என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications