ஆசிரியர் இடமாற்றம்... திமுகவுக்கு அமைச்சர் விளக்கம்
சென்னை:
தமிழகத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான அரசின் புதிய திட்டத்தால் கிராமப்புற பள்ளிகளின்செயல்பாடுகள் பாதிக்காது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கு திமுக சார்பில் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஆசிரியர்கள் நகர்ப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டால் கிராமப்புறபள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கும் என்று திமுக அச்சம் தெரிவித்துள்ளது.
இந்த அச்சம் தேவையில்லாதது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார். இதுதொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கஅரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தால் கிராமப்புறப் பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று திமுககூறியிருப்பது தேவையில்லாதது.
கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நகர்ப்பகுதிகளுக்கு மாற்றப்படும்போது அவர்களுக்குப்பதிலாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகே கிராமப்புற ஆசிரியர்கள் தங்களது புதியபணியிடத்திற்குச் செல்ல முடியும்.
எனவே, கிராமப்புற ஆசிரியர்கள் மாற்றத்தால் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறுவது நியாயமில்லாததுஎன்று கூறியுள்ளார் தம்பித்துரை.