ரங்கநாதன் வீட்டில் அதிரடி சோதனை
சென்னை:
பணம் கேட்டு மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை புரசைவாக்கம்எம்எல்ஏ ரங்கநாதனின் வீடுகளிலும், அலுவலகத்திலும் திடீரென சோதனை நடத்தப்பட்டது.
சிறப்புப் போலீஸார் நடத்திய இந்த அதிரடிச் சோதனையின்போது, தேவையான எதுவும் சிக்கவில்லை என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் பெரவள்ளூர் ஜவகர் நகரிலுள்ள ரங்கநாதன் வீட்டில் சோதனைநடைபெற்றது. அண்ணாநகரில் உள்ள இவருடைய மற்றொரு வீட்டை இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலானபோலீஸார் சோதனையிட்டனர்.
இவைதவிர, அயனாவரம் குன்னூர் சாலையிலுள்ள ரங்கநாதனின் அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார்தலைமையில் சோதனை நடந்தது. மேலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள இவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக்கம்பெனியிலும் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சோதனை நடைபெற்றது.
சனிக்கிழமை காலை முதல் மாலை வரை இச்சோதனை நடந்தது. ஆவணங்கள், ரொக்கம், நகைகள், துப்பாக்கிஉள்ளிட்ட ஆயுதங்கள் ஏதாவது இருக்கிறதா என்று போலீஸார் இந்தத் திடீர் சோதனையை நடத்தியதாகக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications