நாளை எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறைஅதிகாரி பரமசிவம் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த மார்ச் மாதம் 27 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி வரை நடந்தது.
மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 366 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும் முடிவடைந்து விட்டது.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்படும். முடிவுகள் வெளியிடப்படும் அதே நாளில்மதிப்பெண்களையும் மாணவ, மாணவிகள் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் பரமசிவம்.












Click it and Unblock the Notifications