For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

70.7 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகள் குறித்து அரசுத்தேர்வு இயக்குநர் பரமசிவம் கூறியதாவது:

70.7 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 73.3 சதவீதம் பேரும், மாணவர்கள் 68.3சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாரா டக்கர் பள்ளி மாணவி சுபாஷினி 500 மதிப்பெண்களுக்கு 490மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த ஏகம்மை என்ற மாணவியும் 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

9502 மாணவ, மாணவியர் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 698 மாணவ, மாணவியர் அறிவியல்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாணவ, மாணவியர் ஒரு வாரத்தில் மதிப்பெண் பட்டியலைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்ஆறு இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர் என்றார்.

முதல்வர் ஜெ.பாராட்டு:

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் முதல் 6 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டுப்பத்திரமும், ரூ 1,500 க்கான காசோலையும் வழங்குகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X